சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.